Latest News
Home / இலங்கை / பல்கலைக்கழக மாணவியை பலவந்தமாக காரில் கடத்த முயற்சித்த நபர்!!

பல்கலைக்கழக மாணவியை பலவந்தமாக காரில் கடத்த முயற்சித்த நபர்!!

களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயதான மாணவியை பலவந்தமாக காரில் கடத்திச் செல்ல முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அந்த காருடன் கிரிபத்கொடை பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை அல்விஸ் டவுன் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த போது பிரதான சந்தேக நபர் காருடன் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் காரின் சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

களனி பல்கலைக்கழகத்தில் பயிலும் 24 வயதான மாணவி நேற்று முன்தினம் மாலை விடுதிக்கு செல்வதற்காக சரசவி மாவத்தையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த போது, அவருக்கு பின்னால் காரில் வந்த சந்தேக நபர்கள் மாணவியை பலவந்தமாக காரில் ஏற்றமுயற்சித்துள்ளனர்.

அப்போது மாணவி சத்தமிட்டதால், காரில் வந்தவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கிரிபத்கொடை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து குற்ற விசாரணைப்பிரிவினர்,

சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள விடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு காரை அடையாளம் கண்ட பின்னர் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *