Latest News
Home / ஆலையடிவேம்பு / பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…

பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் ஆரம்பம்…

வி.சுகிர்தகுமார்  

அரச சேவையில் பயிலுனர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான பயிற்சி நெறி இன்றுமுதல் பிரதேச செயலகங்களில் நடைபெற்று வருகின்றன.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதேநேரம் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா   சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் பயிற்சி நெறியினை முன்கொண்டு சென்றனர்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான பயிற்சி நெறிகளும் தலைமைத்துவ பயிற்சிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன.

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *