வி.சுகிர்தகுமார்
இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் வி.பபாகரனின் வழிகாட்டலில் பயிற்சி நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதேநேரம் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் நிருவாக உத்தியோகத்தர் கே.சோபிதா சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பி.ரவிச்சந்திரன் உள்ளிட்ட குழுவினர் பயிற்சி நெறியினை முன்கொண்டு சென்றனர்.
அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாயவின் எண்ணக்கருவிற்கமைய தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிபளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இதன் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் 106 பட்டதாரிகள் இன்று அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு நியமனங்களும் வழங்கி வைக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான பயிற்சி நெறிகளும் தலைமைத்துவ பயிற்சிகளும் இன்று ஆரம்பிக்கப்பட்டன.