Latest News
Home / ஆன்மீகம் / நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா? – ஆவிகளை எப்படி உணர்வது?

நீங்கள் பேயைப் பார்த்திருக்கிறீர்களா? – ஆவிகளை எப்படி உணர்வது?

இரவு நேரத்தில் திடீரென்று மின்சாரத்தடை ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.அந்த இடத்தில் UPS வசதியும் இல்லை என்று வைத்துக்கொள்வோம். அங்கே இருக்கும் மெழுகுவர்த்தியை பற்ற வைப்போம்.அப்போது காற்று அடிப்பதால் எதாவது பொருள் அசையும்.அப்போது உடனே திரும்பி பார்ப்போம். அங்கே எதுவும் இருக்காது.இங்கே நாம் பயப்படாதவர்களாக இருக்கலாம் .ஆனால் எப்பொழுதாவது அவை எதனால் என்று யோசித்ததுண்டா? இது போல பலவகையான அமானுஷ்ய நிகழ்வுகள் இருக்கிறது.

அமானுஷ்ய நிகழ்வுகள்

samayam tamil

அமானுஷ்யம், பேய் குறித்த துறை சார்ந்த வல்லுநர்கள் ஒவ்வொரு அமானுஷ்ய நிகழ்வுக்கென்று பெயரும் ,அது இப்படி தான் நிகழ்கிறது என்று வரையறையும் செய்துள்ளனர்.அந்த காலத்தில் எப்படி அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்தேறி இருக்கிறது என்று அறிந்து கொள்ள ‘Ghosts and Gravestones’ செல்லலாம் . அது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும்.அதுவும் அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்தால் அதை அறிவியல் ரீதியாக ஆராயாமல் ஜோசியரிடம் அல்லது சாமியரிடம் செல்கிறோம். இந்த மாயையை அகற்றுவதற்கு இந்த இடத்திற்கு கல்விச் சுற்றுலா செல்லலாம்.இங்கே சென்றால் அறிவியல் மீது ஆர்வம் ஏற்படும். ஏனெனில் அவர்கள் இந்த அமானுஷ்ய நிகழ்வுகளை மறுபடியும் அறிவியலின் உதவியோடு உருவாக்குகிறார்கள்.

அறிவியல் என்பது விளங்கிக்கொள்ளக் கூடிய ஒன்று.எனவே விளங்கிக்கொள்ள முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளை விளங்கிக் கொள்வோம்.இதைப் புரிந்து கொள்வதற்கு இயற்பியல்,புகைப்படக் கருவிகள் பற்றிய அறிவு,துணி வகைகள் பற்றிய அறிவு இருக்க வேண்டும். இங்கே சென்றால் எப்படி இவ்வாறு நிகழ்கிறது என்று யோசிப்போம். இதற்கு பின்னால் இருக்கும் அறிவியலை நீங்களே கணித்துக் கொள்ளுங்கள்.இனி அங்கே என்ன அமானுஷ்ய நிகழ்வுகளை எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.இங்கே அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு அவர்கள் வழங்கிய பெயரையே நாமும் குறிப்பிட்டு இருக்கிறோம்.

 

சிலர் தொடுவது போன்ற உணர்வு

samayam tamil

நாம் பார்க்கும் பேய்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினராகவோ அல்லது சில சமயம் வரலாற்றில் இடம்பிடித்தவராகவோ தான் இருக்கும்..அவர்கள் நம் கண்களுக்குத் தெரிவார்கள், சில நேரங்களில் சத்தம் மட்டும் கேட்கும் ,சில நேரங்களில் நம்மிடம் பேசுவார்கள்,சிலர் தொடு உணர்ச்சியின் மூலம் அவர்கள் இருப்பதை உணர்த்துவார்கள், சிலர் எதாவது நறுமணத்தை உருவாக்குவார்கள்.இப்படி அவர்கள் தங்களை வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்திக்கொள்வார்கள்.அவர்கள் உயிரோடு இருந்த போது எப்படி இருந்தார்களோ அதே குணங்களோடு தான் ஆவியாக மாறிய பிறகும் இருப்பார்கள்.அவர்கள் உங்களுக்கு ஆறுதல் அளிக்க அல்லது முக்கியமான எதையோ உணர்த்த தான் வருவார்கள். அவர்களுக்கு உங்கள் மேல் அன்பு அதிகமாக இருக்கும்.

மூடுபனி சுழவது

samayam tamil

The Ectoplasm or Ecto-mist : இங்கே மூடுபனி சுழலுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அதனை அமானுஷ்ய நிகழ்வுகள் பற்றி ஆராய்பவர்கள் ectoplasm

அல்லது ecto-mist என்கிறார்கள்.இந்த நீராவி போன்ற மேகங்கள் தரையை தொடாது.சில சமயங்களில் அது சுழலும் அல்லது அப்படியே அசையாமல் இருக்கும்.இந்த ஆவி சார்ந்த அனுபவங்களை நிறைய பேர் காணொலியாக , புகைப்படமாக பதிவு செய்து இருக்கிறார்கள். அவை வெள்ளை, கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தில் இருக்கும்.அவை அப்படியே அசையாமல் இருக்கும் அல்லது நகறும்.இவை சிறிது காலத்திற்குப் பிறகு மனித வடிவத்தை எடுக்கும்.இவற்றை வெளிப்புறங்களில்,கல்லறைகளில்,போர்க்களங்களில் அல்லது வரலாற்று தளங்களில் காணலாம்.

கூச்சல் போடும் பேய்கள்

samayam tamil

3.The Poltergeist

இந்த சொல்லுக்கு அர்த்தம் ‘கூச்சல் போடும் பேய்கள்’ என்பதாகும்.ஏனெனில் இவை ஒரு பொருளை அசைக்கும்,தட்டி விடும்,கூச்சல் போடும் மற்றும் சுற்றுப்புறச் சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும்.இவை அரிதாகவே நடக்கும். அது மட்டுமில்லாமல் இவை திகிலூட்டுபவை.கதவை படபடவென தட்டுவது, கதவை அறைந்து சாத்துவது,குழல் விளக்கு தானாகவே அணைவது மற்றும் எரிவது,திடீரென்று தீ விபத்து ஏற்படுவது என்று இவையெல்லாம் இதனால் தான்.

இந்த நிகழ்வுகள் சில நேரங்களில் மெதுவாக ஆரம்பித்து தீவிரமாக மாறும். பல நேரங்களில் அவை ஆபத்தற்ற ,சீக்கிரமாக நடந்து முடியும் செயலாக இருக்கும். ஆனால் சிலது ஆபத்தானவை.சிலர் இதை மனிதன் தான் அவனை அறியாமலேயே செய்கிறான் என்கிறார்கள்.இவற்றை பற்றி அறிந்து கொள்ள அமானுஷ்ய நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள்,அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

 

பேய்கள் மற்றும் கல்லறைகள்

samayam tamil

Orbs

இவற்றை பெரும்பாலும் புகைப்படங்களில் மட்டுமே பார்க்க முடியும்.இவை முழுத்தோற்றம் அடைவதற்கு முன் ஆரம்ப நிலையில் இப்படி தான் இருக்கும்.இவை பந்து வடிவத்தில் உள்ள ஒளி ஊடுருவக்கூடிய அல்லது ஒளி கசியும் துகளாக இருக்கும். Ghosts and Gravestones-க்குச் செல்பவர்கள், அவர்கள் எடுக்கும் புகைப்படங்களில் அவை பதிவானதை கண்டு வியந்திருக்கிறார்கள்.

இவை பெரும்பாலும் மனிதரின் அல்லது விலங்கின் ஆன்மாவாக இருக்கும். இவை உருண்டையாக இருப்பதால் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்குச் சுலபமாக செல்லும்.இவை காணொலிகளில் அதிவேகமாக செல்வதைப் பார்க்கலாம்.இவை பெரும்பாலும் புகைப்படங்களில் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும்.சில சமயங்களில் நீல நிறத்தில் பதிவாகி இருக்கும்.

புகைபடத்தில் பதிவாகியிருக்கும் அமானுஷ்யம்

samayam tamil

5.Funnel ghosts

இந்த வகை பேய்கள் குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ள வீடுகளில் அல்லது வரலாற்று கட்டடங்களில் இருக்கும்.அது பெரும்பாலும் மனதிற்கு இனியவர்களைப் பார்க்க வரும் அல்லது தான் குடியிருந்த வீட்டை பார்க்க வரும்.அவை ஒரு சிறு ஒளிக்கற்றையாக அல்லது சுழலும் ஒளியாக தென்படும்.இவை புகைப்படங்களிலும் , காணொலிகளிலும் பதிவாகி இருக்கும்.

Check Also

தை பிறந்தால் வழி பிறக்கும்!

தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *