திருக்கோவில் பிரதேத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் திருக்கோவில் விநாயகபுரம் பகுதியிலும் தம்பட்டை பகுதியிலும் இவ் நடமாடும் வைத்திய முகாம் இடம்பெற்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் விசேட வைத்திய முகாமில் கொவிட்19 தடுப்பூசி வழங்கல் மற்றும் வைத்திய பரிசோதனைகள், தொற்று நோய்களுக்கான பரிசோதனைகள் (சீனிப்பரிசோதனை ,BMH, குருதியழுத்தம், தொற்றா நோய் சம்மந்தமான விளிப்புணர்வுகள், பரிசோதனைகள், கொலஸ்திரோல் போன்ற பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றது.
மேலும் இவ் நிகழ்வானது பொதுமக்களின் நலன் கருதி சுகாதார வைத்திய அதிகாரி MOH.Dr.P.மோகனகாந்தன் அவர்களின் குழுவினர் அவர்களின் கிராமங்களுக்கே சென்று இவ் விசேட வைத்திய முகாமை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜே.கே.யதுர்ஷன்