Latest News
Home / விளையாட்டு / நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரிலிருந்து டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். தொடரிலிருந்து டெல்லி அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகல்!

நடப்பு ஆண்டு ஐ.பி.எல். ரி-20 தொடரிலிருந்து டெல்லி கெபிடல்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் விலகியுள்ளார்.

இதுகுறித்து டெல்லி கெபிடல்ஸ் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா நடப்பு தொடரிலிருந்து விலகியுள்ளார்.

ஒக்டோபர் 7ஆம் திகதி டுபாயில் நடைபெற்ற பயிற்சியில் பந்து வீசும்போது இடது விலா எலும்பில் வலி ஏற்பட்டதை இஷாந்த் சர்மா அனுபவித்தார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை 13போட்டிகளில் விளையாடி பந்துவீச்சு வரிசையில் ஒரு முக்கிய வீரராக திகழ்ந்த இஷாந்த் சர்மா, இந்த பருவத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மட்டுமே விளையாடினார்.

Check Also

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : இலங்கைக்கு 180,000 அமெரிக்க டொலர் பரிசு !

ஆடவருக்கான 13வது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்றுள்ள நிலையில் குழு நிலை போட்டியில் பெற்றுக்கொண்ட ஒவ்வொரு வெற்றிக்கும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *