Latest News
Home / கவிதைக்களம் / தீபாவளி

தீபாவளி

பண்டிகை எல்லாம் பகட்டாக போக
ஸ்வரம் இல்லாத சங்கீதமாக
ஸ்ருதி இல்லாத குரலாக
பண்பாட்டை சிதைத்து
போலி கலாச்சாரத்தை அலங்கரித்து
உதட்ளவு சிரிப்பில் ஏகபோக
கொண்டாட்டம்.

தற்போதய தலைமுறை
நுகர்வு கலாச்சாரத்தின் உச்சம்
பாரம்பரிய பழக்க வழக்கம் மறந்த பரிதாபம்
காசு கொடுத்து கடையில்
பட்சணங்கள், இனிப்பு வகைகள் வாங்கி பாஸ்ட்புட் பாணியில் பண்டிகை கொண்டாடும் கோமாளிகள்.

பணக்கார வீட்டு பிள்ளை
ஆயிரம் வாலா வெடிக்குது
ஏழை வீட்டு பையன் அதை
ஏக்கத்தோடு வேடிக்கை பார்க்கிறது
ஏன் இந்த ஏற்ற தாழ்வு
ஏன் இந்த பாகுபாடு
இருப்பவர் இல்லாதவருக்கு
கொடுத்து
ஒற்றுமையுடன் தீபாவளி மட்டும் அல்ல
எந்த பண்டிகையையும்
கொண்டாடினால்
அதுவே உண்மையான கொண்டாட்டம்
சந்தோஷம்
மகிழ்ச்சி.

 

Check Also

பிரிவினை! கவிதை…

காதலின் அணுக்கருக்கள் நம்முள் பரவத் தொடங்கின.. எத்தனை பரவசமான நிகழ்வது! நீர்த்துளிகளை பனிக்கட்டி ஆக்கியது போல் ஒரு நெருக்கம் கைக்குட்டைகளில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *