Latest News
Home / ஆன்மீகம் / தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா!

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா!

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கோயிலில் எதிர்வரும் 28ஆம் திகதி பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைபெறவுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் வெகுசிறப்பாக நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இவ்வாண்டு வரும் நவம்பர் 29ஆம் திகதி நடைபெறுகிறது.

இந்நிலையில், தீபத் திருவிழாவினை முன்னிட்டு வரும் 28ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கும் 7 மணிக்கும் இடையில் பந்தகால் நடும் முகூர்த்த விழா நடைறும் என கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பக்தர்கள் பந்தகால் முகூர்த்த விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் தீபத் திருவிழாவும் அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

தை பிறந்தால் வழி பிறக்கும்!

தமிழ் வருடத்தின் 10 ஆவது மாதமாக வருவது தை மாதம். இந்த மாதத்தில் தான் சூரியன் தனுசு ராசியில் இருந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *