திருநாவுக்கரசர் குருபூசை தினத்தையொட்டி கோளாவில் அறுத்த நாககொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் ஏற்பாட்டில் அறநெறி மாணவர்களின் பங்குபற்றலுடன் சிறப்பு ஊர்வலம் இன்று (14/05/2023) காலை 6.00 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த திருநாவுக்கரசர் குருபூசை தினத்தையொட்டி கோளாவில் ஸ்ரீ விக்னேஸ்வர ஆலயத்த்தில் சிறப்பு பூசை நிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றது. மேலும் நிகழ்வு அறுத்த நாககொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையின் தலைவர் பெ. சண்முகம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றதுடன் கலந்துகொண்ட மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் மற்றும் பேனாக்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டது.