ஜே.கே.யதுர்ஷன்
திருக்கோவில் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கடற்கரை வீதியில் நேற்று பிற்பகல் வேளையில் இவ் எரிவாயு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ் எரிவாயு வெடிப்பில் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச் சம்பவத்தை திருக்கோவில் பிரதேச பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார்.
மேலும் இச்சம்பவத்தில் ஏரிவாயு அடுப்பு பலத்த சேதமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.