சவுதி ஊடகவியாளர் ஜமால் கஷோகி கொலை தொடர்பான விசாரணையில், அதிர்ச்சி வாக்குமூலமொன்றை இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரக அதிகாரியொருவர் அளித்துள்ளார்.
துருக்கியில் காக்லேயன் மாவட்டத்தில் உள்ள இஸ்தான்புல் மாகாணத்தின் பிரதான நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜமால் கஷோகி கொலை தொடர்பான விசாரணை, தொடங்கியது.
விசாரணையின் முதல்நாளில் தூதரகத்திற்காக பணிபுரிந்த உள்ளூர் தொழில்நுட்ப வல்லுநரான ஜெக்கி டெமிர், வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதன்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், ‘காஷோகி அருகிலுள்ள துணைத் தூதரகத்திற்குள் நுழைந்த பின்னர் நான் தூதரின் இல்லத்திற்கு அழைக்கப்பட்டேன்.
அங்கே ஐந்து முதல் ஆறு பேர் இருந்தார்கள். அவர்கள் தந்தூர் அடுப்பை ஒரு மணி நேரத்திற்குள் எரிய வைக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
தூதரின் தோட்டத்தில் அடுப்புக்கு கூடுதலாக பல இறைச்சிகள் மற்றும் ஒரு சிறிய பார்பிக்யூவைக் கண்டேன்.
அடுப்பைச் சுற்றியுள்ள பளிங்கு அடுக்குகள் ஒரு ரசாயனத்தால் சுத்தம் செய்யப்பட்டதைப் போல நிறம் மாறியதாகத் தோன்றியது’ என கூறினார்.
இன்னொரு சாட்சியாளர் கூறுகையில், உள்ளூர் உணவகமொன்றிலிருந்து பதப்படுத்தப்படாத கபாப் துண்டுகளை வாங்க அவர்கள், உத்தரவிட்டதாகக் கூறினார்.
இதன்போது, இருண்ட ஜன்னல்களுடன் ஒரு கார் வந்தபோது, வாகன தரிப்பிட கதவை திறக்க முற்பட்டேன. ஆனால், அவர்கள் தன்னை விரைவாக தோட்டத்தை விட்டு வெளியேறும்படி ஜெக்கி டெமிர், கூறினர்.
59 வயதான வொஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரான கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி கொல்லப்பட்டார். அவர் தனது திருமண ஆவணங்களைப் பெறுவதற்காக வளாகத்திற்குள் நுழைந்திருந்தபோதே அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இதனிடையே மார்ச் மாதத்தில், கஷோகி கொலை தொடர்பாக துருக்கி வழக்குரைஞர்கள், சவுதி மகுடத்திற்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், ராஜ்யத்தின் உண்மையான ஆட்சியாளரான இரண்டு முன்னாள் மூத்த உதவியாளர்கள் உட்பட 20 சவுதி நாட்டினரை குற்றஞ்சாட்டினர்.
இந்த குற்றச்சாட்டின் படி, சவூதி அரேபியாவின் முன்னாள் துணை புலனாய்வுத் தலைவர் அகமது அல்-அஸ்ரி ஒரு குழுவை நிறுவி, சவுதி அரசாங்கத்தை விமர்சித்த பத்திரிகையாளரின் கொலைக்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அரச நீதிமன்றமும் ஊடக ஆலோசகருமான சவுத் அல்-கஹ்தானி, இந்த குழுவுக்கு உத்தரவுகளை வழங்குவதன் மூலம் இந்த நடவடிக்கையைத் தூண்டி வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மற்ற சந்தேக நபர்கள் முக்கியமாக சவுதி அதிகாரிகள் இந்த படுகொலை நடவடிக்கையில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. துருக்கிய வழக்குரைஞர்கள் ஏற்கனவே சந்தேக நபர்களுக்கு கைது உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ஆனால், விசாரணையின் முதல் நாளில், 20 சவுதி அதிகாரிகள் ஆஜராகாமல், இருந்தமை உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியது.