Latest News
Home / ஆன்மீகம் / சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பாதை யாத்திரை…

சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து பக்தர்கள் கதிர்காமம் நோக்கி பாதை யாத்திரை…

யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் இம்முறை கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை தடைப்படும் என எண்ணியிருந்தோம். ஆனால் முருகனின் அருளால் எமக்கு பாத யாத்திரை செல்வதற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது.

எதிர்வரும் 30ஆம் திகதி தொண்டமனாறு செல்வச்சந்நிதியில் இருந்து, மோகனதாஸிடம் வேல் பெற்று, கதிர்காமத்தை நோக்கி யாத்திரையை தொடங்கவுள்ளோம். தொடர்ந்து 46 நாட்கள் கால் நடையாக கதிர்காம கந்தனின் கொடியேற்ற தினத்தன்று அங்கு சென்றடையவுள்ளோம்.

கடந்த காலங்களில் போன்று இம்முறையும் யாத்திரையை தொடங்கவுள்ளோம். கொரோனோ தொற்று அபாயம் காரணமாக உரிய சுகாதார முறைகளை பேணி இந்த யாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் யாத்திரை செல்லும் அனைவரும் இரண்டு மீற்றர் சுற்றளவு இடைவெளியை தொடர்ந்து பேணி நடக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *