Latest News
Home / இலங்கை / கொழும்பில் 10 வருடமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரிடம் 137 காணொளிகள்!!

கொழும்பில் 10 வருடமாக மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரிடம் 137 காணொளிகள்!!

பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்தி ஆபாசகாணொளி எடுத்தத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த மேலதிக வகுப்பு ஆசிரியருக்கு எதிராக மாணவர்களின் வீடியோக்களை ஆதாரமாக பெற்றுக் கொள்வதற்காக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த சந்தேக நபர் பன்னிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடைய நபராகும். சந்தேக நபருக்கு சொந்தமான Pen driver காணாமல் போனதை தொடர்ந்து அதில் இருந்த வீடியோக்கள் சில சமூக வலைத்தளம் ஊடாக பரவ ஆரம்பித்துள்ளது.

அந்த வீடியோவில் பாடசாலை மாணவர்களின் ஆபாசகாணொளிகள் காணப்பட்ட நிலையில், மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் உடன் விசாரணைகளை ஆரம்பித்து சந்தேக நபரை கைது செய்துள்ளார்.

சந்தேக நபர் பன்னிப்பிட்டிய பிரதேச வீடுகளுக்கு சென்று மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்பிப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் வீட்டில் இருந்து பல மாணவர்களின் ஆடைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் மாணவர்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட பல வீடியோக்களும் கண்டுபிடிக்ப்பட்டுள்ளது. தற்போது அவரால் எடுக்கப்பட்ட 137 வீ டியோக்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்தும் இடங்களுக்கு சென்று மாணவர்களின் புகைப்படம் மற்றும் காணொளிகளை ட்ரோன் கமரா பயன்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

 

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *