Latest News
Home / இலங்கை / கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது!!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது!!

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜிய மட்டத்துக்கு கொண்டு வரமுடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இன்னும் சில வாரங்கள் செல்லும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கையில் கம்பஹாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதேபோன்று மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொற்றின் தொடர்பாளர்கள் எண்ணிக்கையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இந்த நிலையில் கொரோனா வைரஸை நாட்டில் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

 

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *