Latest News
Home / உலகம் / கொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா!!

கொரோனா தடுப்பூசி தயார் : உலகின் முதல் நாடாக அறிவித்த ரஷ்யா!!

கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சர் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு இறுதி பகுதியில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டது.

தற்போது உலகின் பெரும்பாலன நாடுகளில் கொரோனா தொற்று பரவியிருக்கும் நிலையில், பல லட்சம் மக்கள் கொரோனா தொற்று காரணமாக உ யிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, உலக நாடுகள் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள் நிறைவடைந்துவிட்டதாக உலகின் முதல் நாடாக ரஷ்யா அறிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் கருத்து வெளியிடுகையில், “கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் நிறைவடைந்து விட்டன.

அடுத்து பதிவு செய்வதற்கான ஆவண வேலைகள் நடந்து வருகின்றன” ஒக்டோபர் மாதம் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கு திட்டமிட்டிருக்கிறோம்.

கொரோனாவுக்கு புதிய சிகிச்சை முறையை படிப்படியாக தொடங்க வேண்டும் என்பதால் தடுப்பூசியை ஒக்டோபரில் போட திட்டமிடுகிறோம்” என மேலும் கூறியுள்ளார்.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *