Latest News
Home / தொழில்நுட்பம் / கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு! ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு! ப்ளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கிய கூகுள்

கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து 85 செயலிகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

டிரென்ட் மைக்ரோ எனும் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்த தகவல்களுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செயலிகளில் தீங்கு விளைவிக்கும் தன்மையைக் கொண்ட ஆட்வேர்கள் மறைந்திருப்பதை குறித்த குழு கண்டறிந்துள்ளது.

குறித்த ஆட்வேர்கள் கூகுள் பிளே ஸ்டோரில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கமான ஆட்வேர்களை போன்று இல்லாமல் இவற்றில் தோன்றும் விளம்பரங்களை க்ளோஸ் செய்வது கடினம் என்றே கூறப்படுகிறது.

சூப்பர் செல்ஃபி, சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா, மற்றும் ஒன் ஸ்ட்ரோக் லைன் பஸில்  உள்ளிட்ட செயலிகள் நீக்கப்பட்டுள்ளன. ஆட்வேர் நிறைந்ததாக கண்டறியப்பட்ட செயலிகளில் பெரும்பான்மையானவை புகைப்படம் மற்றும் கேமிங் சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றை சுமார் 80 இலட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமகாவே குறித்த செயலிகளை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Check Also

சிறுமிகள், பெண்களை அச்சுறுத்தும் AI

(AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் தாக்கங்கள் மற்றும் அதனால் விளையும் நன்மை – தீமைகள் ஆகியவை குறித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *