Latest News
Home / உலகம் / குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கை!

குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கை!

குழந்தைகளை கவரும் வகையில் பொதியிடப்பட்ட கைச் சுத்திகரிப்பான்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சில நிறுவனங்கள் குழந்தைகளை ஈர்க்கும் வகையில் கார்ட்டூன் வடிவங்களுடன் கசக்கிப் பைகளில் கைச் சுத்திகரிப்பான்களை பொதியிடுகின்றன.

கசக்கிப் பைகள் பொதுவாக பழ ப்யூரி தின்பண்டங்கள் அல்லது குழந்தைகளுக்கான சாறுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

அவை கண்காணிக்கப்படாவிட்டால், சில குழந்தைகள் ஆல்கஹால் சார்ந்த தயாரிப்பு மற்றும் சிற்றுண்டியைப் பற்றி எளிதில் குழப்பமடையக்கூடும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர்களும், பாதுகாவலர்களும் இந்த தயாரிப்புகளைப் பற்றி மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனெனில், குழந்தைகள் தற்செயலாக அவற்றை உண்ணக்கூடிய பொருட்கள் என தவறாகப் புரிந்துகொண்டு அவற்றை உட்கொள்ளக்கூடும் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்தில், சுகாதாரத்துறை உலகளாவிய பற்றாக்குறைகளுக்கு மத்தியில் பொருத்தமான பொதியிடல்களை பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த தயாரிப்புகளின் அடையாள குறியீடுகளை எப்போதும் படிக்க கனடியர்களை அது வலியுறுத்துகிறது.

Check Also

ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பம்

இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று புதுடெல்லியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *