Latest News
Home / இலங்கை / கீரை பிடிங்கிக் கொண்டிருந்த விவசாயிக்கு காத்திருந்த பேராபத்து!

கீரை பிடிங்கிக் கொண்டிருந்த விவசாயிக்கு காத்திருந்த பேராபத்து!

காட்டு யானை தாக்கியதில் கீரை வகை பிடுங்கிய விவசாயியொருவர் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட மல்வத்தை மல்லிகை தீவில் நேற்று  (09) மாலை இச்சம்பவம் இடம்பெற்றது.

இச்சம்பவத்தில் கணபதிபுரம் பகுதியில் வசிக்கும் எஸ்.சோதிலிங்கம் (வயது 59) என்ற விவசாயியே உயிரிழந்துள்ளார்.

இவர் தனது மல்வத்தை கணபதிபுரம் கிராமத்திலிருந்து மல்லிகைத்தீவு வயல் பகுதிக்குள் பொன்னாங்கன்னி பிடுங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே அவ்விடத்துக்கு வந்த காட்டு யானை தாக்கியதால் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *