காற்றே உன்னோடு நான் கவிதை பாடுவேன்
கனவில் நேற்று என் தேவதை வந்தாள்
ஆற்றின் அலையே உன்னோடு நான் நீராடுவேன்
காதோரம் அவள் மெல்லிய வார்த்தை சொல்லி போனாள்
வான் நிலவே உன்னை வந்து முத்தமிட வேண்டும்
சத்தமில்லாமல் இன்று அதை அவள் தந்து போனாள்
மலர்த்தோட்டத்து ரோஜாக்களே இதழ்களை விரைந்து தூவுங்கள்
இதோ சிறிது நேரத்தில் அவள் வந்துவிடுவாள் !