ஒன்லைன் வேலைத்திட்டத்தில் கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் கல்முனை வடக்கு மற்றும் மேற்கு சமுர்த்தி வங்கியும் இணைவு

வி.சுகிர்தகுமார்   

  அம்பாரை மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளை கணனி மயப்படுத்;தும் வேலைத்திட்டத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இவ்வாறு காரைதீவு மற்றும் பொத்துவில் தெற்கு வங்கிகள் கணிணிமயப்படுத்தப்பட்டு ஒன்லைன் சேவைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில்  மூன்றாவது வங்கியாக கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின்  கல்முனை வடக்கு மற்றும் நான்காவதாக மேற்கு சமுர்த்தி வங்கியும்; இணையவுள்ளன.

இதற்கமைவாக கணிணி மயப்படுத்தலின் இறுதிக்கட்ட செயற்பாடான நாளாந்த  நடவடிக்கையினை தரவேற்றம் செய்யும் பொருட்டு வங்கி பணிக்குழுவினருக்கு கடவுச்சொல் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பிரதேச செயலாளர் திரு. ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு கணனி வேலைத்திட்டம் தொடர்பான  செயற்பாட்டினை பார்வையிட்டதுடன் வங்கி பணிக்குழுவினருக்கு கடவுச்சொல்லினையும் கையளித்தார்.

குறித்த செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவேற்றிய உத்தியோகத்தர் குழாமை பாராட்டியதுடன் சமுர்த்தி பணிப்பாளர் நாயகம்,  பிரதேச செயலாளர், மாவட்ட பணிப்பாளர், தலைமையக முகாமையாளர் ,   வங்கி மேற்பார்வை உத்தியோகத்தர் உள்ளிட்;டவர்களுக்கும் தனது பாராட்டினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார்.