Latest News
Home / இலங்கை / எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுத்தல்!

எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுத்தல்!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாமென மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாகவும் தனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Check Also

மின்சார கட்டணம் 21.9 சதவீதத்தால் குறைப்பு!

மின் கட்டணம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் 21.9 சதவீதத்தால் குறைக்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *