Latest News
Home / ஆலையடிவேம்பு / உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு….


உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசக்தி அமைப்பினால் நடாத்தப்பட்டு வருகின்ற பாலர் பாடசாலை மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வுகள் இன்று (01/10/2022) சனிக்கிழமை மாலை 03.00 மணியளவில் கோளாவில் பிரதேச பகுதியில் சிறப்பானதாக இடம்பெற்றது.

நிகழ்வில் அதிதிகளாக மகாசக்தி அமைப்பின் தலைவி மங்கையக்கரசி பியசேன, மகாசக்தி அமைப்பின் செயலாளர் திலகராஜன், திருக்கோவில் வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி.மதூர் மயூரன், ஆயுர்வேத வைத்தியர் அமினா மற்றும் முன்பள்ளி பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

இவ் நிகழ்வில் மகாசக்தி கண்ணகி கிராமம் பாலர் பாடசாலை, மகாசக்தி கிராம எழுச்சி பாலர் பாடசாலை, மகாசக்தி கோளாவில் பாலர் பாடசாலை மற்றும் மகாசக்தி நாவற்காடு பாலர் பாடசாலை மாணவர்கள் பங்குபற்றிய கலை நிகழ்வுகள் மற்றும் சிறுவர்கள் மகிழ்ச்சி அடையும் வகையில் பல விளையாட்டு போட்டிகள் என்பன சிறந்த முறையில் குறித்த பாலர் பாடசாலை ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நிகழ்வை பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் பார்வையிட வந்திருந்தார்கள்.

 

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *