Latest News
Home / இலங்கை / உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை

நாளை இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கணித பாடத்திற்கு சாதாரண கணிப்பான்களை பயன்படுத்துவதற்கும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக அவர் எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், பரீட்சை மத்திய நிலையத்தின் மேற்பார்வையாளருக்கு அறிவிக்க முடியும்.

இல்லையேல், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அழைக்க முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *