Latest News
Home / இலங்கை / இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்

இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது – விவசாய அமைச்சர்

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்வதைவிட, இலங்கை விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றிய அவர், “அரிசி தட்டுப்பாடு உள்ளதால் நாட்டிற்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டது. சுமார் ஏழெட்டு நாடுகளில் இருந்து அரிசி கொண்டு வருகிறோம்.

இந்த அனைத்து அரிசிகளையும்விட, நம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி தரம் வாய்ந்தது. அச்சமின்றி கூற முடியும். உயர்தர அரிசியை உற்பத்தி செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. கடந்த காலங்களில் பல நெல் வயல்களில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டது.

பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படவில்லை. வேறு எந்த நாட்டிலிருந்தும் கொண்டு வருவதைவிட சந்தையில் கிடைக்கும் நம் விவசாயிகளின் அரிசியை உட்கொள்வதே ஆரோக்கியத்திற்கு நல்லது” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *