கொரோனா தொற்றினை அடையாளம் காண்பதற்காக இலங்கையில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளது.
அதற்கமைய இதுவரையில் மொத்தமாக 2 இலட்சத்து 11 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கையில் ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட அதிகூடிய பி.சி.ஆர். பரிசோதனைகளாக கடந்த 19 ஆம் திகதி 3 ஆயிரத்து 518 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.