Latest News
Home / இலங்கை / இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவு

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் தெரிவு

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இருந்து இவர்கள் தெரிவு செய்யப்பட இருப்பதாக ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் அமரதுங்க தெரிவித்தார்.

கடந்த வருடத்திலும் பார்க்க பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்கள் எண்ணிக்கை 10000 இனால் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் பேராசிரியர் கூறினார்.

இதற்கமைவாக மருத்துவ பீடத்திற்கு 371 பேரும், பொறியியல் பீடத்திற்கு 405 பேருமாக மேலதிக மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

Check Also

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தொடர்பான புதிய அறிவிப்பு!

மறுசீரமைப்பு திட்டத்திற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்வதற்காக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஏல காலத்தை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி, இன்று நடைபெறவிருந்த …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *