Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு MOH பிரிவில் 2500 தடுப்பூசிகளும் வெற்றிகரமாக ஏற்றப்பட்டு இன்றுடன் நிறைவு: மேலதிகமாக 1000 தடுப்பூசிகள் கிடைக்கும் சார்ந்தப்பம்!

ஆலையடிவேம்பு MOH பிரிவில் 2500 தடுப்பூசிகளும் வெற்றிகரமாக ஏற்றப்பட்டு இன்றுடன் நிறைவு: மேலதிகமாக 1000 தடுப்பூசிகள் கிடைக்கும் சார்ந்தப்பம்!

-யனோஷன் –

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் அவர்களின் வழிகாட்டலில் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ் அகிலன் அவர்களின் தலைமையில் சினோபார்ம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கை இரண்டாவது நாள் (25) இன்றைய தினம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 2500 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று இன்றைய தினத்துடன் 2500 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு நிறைவடைந்த நிலையில் தடுப்பூசிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மேலதிகமாக 1000 தடுப்பூசிகள் கிடைக்கும் சார்ந்தப்பம் உள்ளதாகவும் இவ்வாறு 1000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றால் எதிர்வரும் நாட்களில் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படும் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திருமதி எஸ்.அகிலன் தெரிவித்தார்.

இதேநேரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள பிரதேச மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Check Also

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend Primer Leakege கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 29 அன்று ஆரம்பம்….

அக்கரைப்பற்று, திருக்கோயில் பிரதேசங்களை சேர்ந்த நாற்பது வயதிற்கு மேற்பட்ட முன்னைநாள் கிரிக்கெட் ஜாம்பவான்களை உள்ளடக்கிய மாபெரும் LPL – Legend …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *