M. கிரிசாந்
ஆலையடிவேம்பு பிரதேசம், அக்கரைப்பற்று 7/4 பிரிவு டயகோணியா முன்பள்ளி பாடசாலை வீதி மோசமாக சேதமடைந்துள்ளமையால் அவ்வீதியுடான மக்களின் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
மிக நீண்ட காலமாக புனரமைப்பு எதுவும் இன்றி காணப்படும் இவ் வீதியை மழைகாலத்தில் வெள்ளம் முழுமையாக மூடி இவ் வீதியில் தேங்கி நிற்பதனால் வீதி சேதமடைந்து மோசமான நிலையில் காணப்படுகின்றது.
தற்போதும் இவ் குறித்த வீதியின் நீர் தேங்கி நிற்பதனால் வீதியில் பயணிப்போர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
பல குடும்பங்கள் வசித்து வரும் இவ் வீதியில் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கு முறையான வடிகான் தொகுதி இல்லாமல் இருப்பதனால் சிறு மழை பெய்ந்தால் கூட நீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் மக்கள் பெரிதும் பல வருடங்களாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே இவ் வீதியினை மீள் புனரமைப்பு செய்து தருமாறும் மற்றும் இப் பகுதிக்கான முறையான வடிகான் கட்டமைப்பு தொகுதியினை அமைத்து தருமாறும் பிரதேசவாழ் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் குறித்த விடயத்தினை உரிய தரப்பினர் கவனத்தில் கொண்டு துரித நடவடிக்கை எடுத்து, மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்துமாறும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.