Latest News
Home / ஆலையடிவேம்பு / ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று….

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று….

வி.சுகிர்தகுமார்

இலங்கையின் 73ஆவது தேசிய சுதந்திரதின கொண்டாட்டங்கள் நாட்டின் பல பாகங்களிலும் உணர்வு பூர்வமாக சிறப்பாக இன்று(04)கொண்டாடப்பட்டது.

இதற்கமைவாக ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் சுகாதார நடைமுறைகளுடன் சுதந்திரதின கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

பிரதேச செயலாளர் வி.பபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் சர்வமத குருமார்கள் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் உள்ளிட்ட அலுவலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

காலை 8.00 மணிக்கு பிரதேச செயலாளரால் தேசிய கொடி ஏற்றிவைக்கப்பட்டதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் சர்வமத குருமார்களினால் சமய அனுஸ்டானம் வழங்கப்பட்டதுடன் பிரதேச செயலாளரினால் சுதந்திர தினம் தொடர்பான விசேட உரை நிகழ்ந்தப்பட்டது.

இதேநேரம் பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகளும் பிரதேச செயலாளர் உள்ளிட்டவர்களினால் நடப்பட்டதுடன் சிரமதானப்பணிகளும் முன்னெடுக்கப்பட்டன.

Check Also

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *