அம்மன் மகளிர் இல்ல பவுண்டேஷனால் (AMIF) ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் கோளாவில் 1, அகத்திகுளம், நாவற்காடு மற்றும் பனங்காடு கிராமங்களில் நடைமுறைப்படுத்தும் முன்பள்ளிகள் கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இலங்கையில் கொரோனா தொற்றினால் மூடப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளை ஆகஸ்ட் மாதம் மீண்டும் திறக்கப்படலாம் என அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதற்கமைவாக முன்பள்ளிகளை மீள தொடங்குவது தொடர்பாக அம்மன் மகளிர் இல்ல பாவுண்டேஷன் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் நிறுவன செயலாளர் V.வாமதேவன் அவர்களின் தலைமையில் ஆசிரியர்களுடன் நேற்றய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.