எமது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பிரதான வீதிகளில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதனால், அது போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவும் பல வீதி விபத்துக்களையும் ஏற்படுத்துகின்றது.
எனவே எதிர்வரும் நாட்களில் வீதிகளில் கட்டாக்காலிகளாக நடமாடும் கால்நடைகள் பிடிக்கப்பட்டு, அதன் காதுகளில் காணப்படும் அடையாளம் மற்றும் அதன் உடலில் காணப்படும் அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதனால் கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளை பாதுகாப்பாக பராமரித்துக்கொள்ளுமாறு ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் த.கிறோஜாதரன் அவர்கள் இன்றைய தினம் பிரதேச கால்நடை உரிமையாளர்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.