அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் நேற்று வியாழக்கிழமை மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இறுதி நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
அந்தவகையில் ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று வம்மியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஆலையடிவேம்பு பிரதேச பொது மக்கள் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இன் நிகழ்வில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.