ஆலையடிவேம்பினை சேர்ந்த சமூக அக்கறை கொண்ட நபர்கள் ஒன்று சேர்ந்து ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டு பிரதேச ஆலயங்கள் மற்றும் பிரதேச பொது இடங்கள் போன்றவற்றில் பாரிய சிரமதான பணிகளை மேற்கொண்டுவந்திருந்தனர்.
அந்தவகையில் ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பு உருவாக்கப்பட்டு ஒருவருட பூர்த்தியினை முன்னிட்டு இன்றைய தினம் (19) சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயத்தில்
முதலாம் வருட ஒன்றுகூடல் நிகழ்வு மற்றும் இறைபிராத்தனை என்பன இடம்பெற்றது.
அதனைத்தொடர்ந்து சுமார் மாலை 4.00 மணியளவில் ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பின் அங்கத்தவர்கள் ஒன்றுகூடல் ஒன்றும் இடம்பெற்றது.
இந்த ஒன்றுகூடலில் எதிர்வரும் காலங்களில் ஆலையடிவேம்பு சமூக நலன் அமைப்பு செயற்படுத்த இருக்கும் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் என்பனவும் இடம்பெற்றது.