ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இதனை தொடர்ந்து இன்று (25.08.2020) திரு சோ.பலசுப்ரமணியம் போடியார் குடும்பத்தினரால் மூன்றாம் நாளுக்கான திருவிழாவின் காலை நேர நிகழ்வு மற்றும் இரவு நேர நிகழ்வும் சிறப்பாக நடாத்தப்பட்டு இனிதே நிறைவடைந்தது.