ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவப்பெருவிழாவின் இந்த வருடத்திற்கான சார்வரி வருட ஆவணி பௌர்ணமி பிரமோற்சவப்பெருவிழா நேற்று (22.08.2020) மாலை பூர்வாங்கக் கிரியையுடன் ஆரம்பமாகியது.
இன்று (23.08.2020) முதலாம் நாள் திருவிழாவின் காலை நிகழ்வாக திருக்கொடியேற்றப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்று இனிதே நிறைவடைந்தது .
மேலும் முதலாம் நாளுக்கான இரவுநேர திருவிழா மாலை 6.30 மணியளவில் திரு.வே.சிவசம்பு வட்டவிதனை குடும்பத்தினர் பங்களிப்புடனும் சிவ ஸ்ரீ.ஸ்கந்த.வரதேஸ்வரக் குருக்கள் தலைமையில் இடம்பெற்று முதலாம் நாளுக்கான திருவிழா நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் சூழ சிறப்பாக இடம்பெற்று இரவு11.30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.