ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது காணப்படுகின்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை வெற்றி கொள்ளும் முகமாக நெல் அவித்தல் மற்றும் இடியாப்பம், புட்டு, இட்லி அவித்து வீட்டு கைத்தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான சகலவிதமான மூலப் பொருட்களையும் மனிதாபிமான செயற்பாட்டாளர் திரு.கார்த்திகேசு யோகநாதன் அவர்களின் தலைமையில் இன்று (07.12.2022) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மனிதாபிமான செயற்பாடானது கனடா நாட்டில் வசிக்கும் திரு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணியாக அமைவதுடன் இது போன்ற தொடர் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதுவும் குறிப்பிடத்தக்கது.