Latest News
Home / ஆலையடிவேம்பு / அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணி…

அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணி…

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவை சேர்ந்த பெண் தலமைதாங்கும் குடும்பம் ஒன்றுக்கு தற்போது காணப்படுகின்ற இக்கட்டான பொருளாதார சூழ்நிலையை வெற்றி கொள்ளும் முகமாக நெல் அவித்தல் மற்றும் இடியாப்பம், புட்டு, இட்லி அவித்து வீட்டு கைத்தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கான சகலவிதமான மூலப் பொருட்களையும் மனிதாபிமான செயற்பாட்டாளர் திரு.கார்த்திகேசு யோகநாதன் அவர்களின் தலைமையில் இன்று (07.12.2022) புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த மனிதாபிமான செயற்பாடானது கனடா நாட்டில் வசிக்கும் திரு சஜிராஜ் நடா அவர்களின் நான்காம் கட்ட மனிதாபிமான பணியாக அமைவதுடன் இது போன்ற தொடர் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருவதுவும் குறிப்பிடத்தக்கது.

 

Check Also

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகத்தின் தமிழ், சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா – 2024 கோலாகலமாக நடாத்தப்பட ஏற்பாடு….

ஆலையடிவேம்பு, உதயம் விளையாட்டுக் கழகம் நடாத்தும் தமிழ்,சிங்கள சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா மற்றும் இசை நிகழ்வு எதிர்வரும் (19/04/2024) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *