அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா (17) சனிக்கிழமை அம்மனின் திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி பூசைகள் இடம்பெற்றுவருகின்றது.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்ற நிலையில் ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய நிர்வாகத்தினர் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை சிறந்த முறையில் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.