யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று (18.11.2022) வெள்ளிக்கிழமை மாலை 04.00 மணியளவில் கழகத்தின் தலைவர் அவர்களின் தலைமையில் அக்கரைப்பற்று, ஸ்ரீ தம்மரதன சிங்கள மகா வித்தியாலய மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்கு அதிதிகளாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரதேச செயலாளர் V.பாபகரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் T. த.கிறோஜாதரன், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், பிரதேச கிராம நிலத்தாரி என பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
மேலும் குறித்த நிகழ்வில் கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் கழக நலன் விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
யங் பிளவர்ஸ் விளையாட்டு கழகத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சீருடையானது மிகவும் நேர்த்தியாகவும் அழகு மிக்கதாக வடிவமைக்கப்பட்டு இருப்பதுவும் குறிப்பிடத்தக்கது.