கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகள் ஒரு வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகின்றது.
மேலும் கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா (13.07.2022) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த உற்சவங்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று (17.07.2022) அக்கரைப்பற்று கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கோளாவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில்
கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வொன்று பக்தி பூர்வமாக சிறந்த முறையில் இடம்பெற்றது.