
“உலகெங்கும் வாழ்கின்ற முருக பக்தர்களை இணைக்கும் வகையில் தமிழ்க் கடவுளான முருகனின் புகழ் கூறும் மாபெரும் திருப்புகழ் மாநாடானது” திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் எதிர்வருகின்ற கந்தசஷ்டி விரத காலத்தில் ஆரம்பமாக இருக்கின்றது.
இந்த நிகழ்வானது 2023.11.13 ஆம் திகதியில் இருந்து 2023.11.18 ஆம் திகதிவரையில் நடக்கவிருக்கின்றது.
ஒவ்வொரு விரத நாளிலும் கந்தபுராணம் பாடுவதற்கு முன்னராக, திருப்புகழ் பாடுவதும், கலை நிகழ்ச்சி ஒன்றும் அத்துடன் சிறு சொற்பொழிவும் நடக்க ஆயத்தமாக இருக்கின்றது.
குறித்த ஏற்பாடுகளை சேவற்கொடியோன் அமைப்பு (அம்பாறை மாவட்டம்), கிழக்கிலங்கை சொதற்பொழிவாளர் ஒன்றியம், அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு என்பன முன்னெடுத்து வருகிறது.