-காந்தன்-
திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியில் (தேசிய பாடசாலை) கணித முகாம் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடை முறைப்படுத்தப்படும் செயத்திட்டத்தின் ஜெம் ( jemp) கணித முகாம் பாடசாலையின் ஆராதனை மண்டபத்தில் இன்று (23/09/2022) காலை 10.30 மணியளவில்
ஜே. ஆர். டேவிட் அமிர்தலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் வரவேற்பு உரையினை திரு.சி.மதியழகன் அவர்கள் வழங்கியதுடன் நிகழ்விற்கு அதிகளாக ஓய்வு பெற்ற கணிதபாட உதவி கல்விப் பண்ணிப்பாளர் திரு.கே. பாலதாசன், திருக்கோவில் வலயத்தின் கணித பாட உதவி கல்விப் பண்ணிப்பாளர் திரு.கு.தயாருபன், கணித பாட ஆசிரியர் ஆலோசகர் திரு.சசிகரன், மற்றும் திகோ /ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியின் பிரதி அதிபர்களான திரு. ஜெயந்தன், மதியழகன் மேலும் கணித பாட ஆசிரியர் ஜனாப் சத்தார் ஆகியோர் அதிதிகாளாக கலந்துகொண்டு இருந்தனர்.
நிகழ்வின் சிறப்பு அம்சமாக மாணவர்களின் வினாவிடைப் போட்டி மற்றும் கணித வில்லுப்பாட்டு, போட்டியில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வருகை தந்த அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.