ஹரிஷ், யனோஷன்
கோளாவில் அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த அலங்கார உற்சவ பெருவிழா சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அலங்கார உற்சவ பெருவிழாவானது (13.07.2022) புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நாளாந்த உற்சவங்கள் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் இன்று (15.07.2022) காலை நிகழ்வாக பாற்குட பவனியானது அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் ஆலயத்தில் இருந்து அருள் மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தை வந்தடைந்து.
மேலும் இன்றைய நாளுக்கான இரவுநேர பக்தி பஜனையும் அம்மன் எழுந்தருளி உள்வீதி வலம் வருதல் என்பதுவும் இடம்பெற்றது.