பிரித்தானியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் வயதானோரை அதிகம் பாதிக்கும் என்பதால் அவர்கள் புகைப்பிடிப்பதை நிறுத்தும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
புகைபிடிப்போருக்கு கொவிட்-19 நோய்க்கான அறிகுறிகள் அதிகம் காணப்படும். மேலும் இதயம், நுரையீரல் சார்ந்த நோய்களுடன், புற்றுநோயும் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், பிரித்தானியாவில் கடந்த 4 மாதங்களாகச் சுமார் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டுள்ளனர். அவர்களுள் அதிகமானோர் இளையர்கள் எனச்சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் நோய்ப்பரவல் சூழலில் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட முயற்சி செய்ததாக Action on Smoking and Health (ASH) அமைப்பும் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியும் (UCL) சேர்ந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்தது.