Latest News
Home / சுவாரசியம் / உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

உலக புகழ்பெற்ற வைரங்கள் பற்றி நீங்கள் அறிந்திடாத தகவல்கள்

வேதியியல் ரீதியாக, வைரமானது கார்பன் கனிமத்தின் திட உறுப்பாகும். வைரங்களுக்கு மேற்கத்தேய நாடுகளில் பயன்படுத்தப்படும் சொற்களின் அர்த்தங்கள் பொதுவாக ஒன்றையே குறிக்கின்றன. இந்த வார்த்தைகளின் மூல ஆரம்பத்தை தேடிப்பார்த்தால் இந்த வார்த்தை “உடைக்க முடியாதது” என்ற பொருளில் இருந்து உருவாக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது. இதனால்தான் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வைரங்கள் நகைகளில் பயன்படுத்தத் தொடங்கின. இன்று நாம் உலகின் மிகப் பிரபலமான சில வைரங்களைப் பற்றி பேசப் போகிறோம்.

கோஹினூர் டயமண்ட்

கோஹினூர் வைரத்தின் கடந்த காலத்தைப் பற்றி பல அற்புதமான புனைக் கதைகள் உள்ளன. ஆனால் இந்த புராணங்களின் முடிவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மயில் சிம்மாசனத்தை அழகுபடுத்த இந்த வைரம் பயன்படுத்தப்பட்டதென கூறப்படுகிறது. பின்னர் இந்த வைரம் பஞ்சாப் அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஆங்கிலேயர்கள் பஞ்சாப் மீது படையெடுத்து அரண்மனையை சூறையாடிய பின்னர் கோஹினூர் வைரம் லண்டனுக்கு அனுப்பப்பட்டது. விக்டோரியா மகாராணி இந்த வைரத்தை ஒரு வளையலில் பயன்படுத்தினாலும் பின்னர் வந்த இங்கிலாந்து ராணிகளான அலெக்ஸாண்ட்ரா, மேரி மற்றும் எலிசபெத் ஆகியோரால் அவரது கிரீடங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த வைரத்தை வாரிசாகக் கொண்டுள்ளன. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த ஒவ்வொரு நாட்டின் கோரிக்கைகளையும் கடுமையாக நிராகரிக்கிறது.

கல்லினன் டயமண்ட்

தென்னாபிரிக்காவின் கலினன் வைர சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தை பிரிட்டனின் மன்னர் VII ஆம் எட்வர்ட்க்கு பரிசாக வழங்கினர். இது அந்த காலக்கட்டத்தில் உலகின் மிகப்பெரிய வைரமாக இருந்தது. பின்னர் ஒன்பது சிறிய வைரங்களாக பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் அரச குடும்பத்தினரால் பல்வேறு நகைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கியது. அதன் மிகப்பெரிய பகுதி, தி ஸ்டார் ஆஃப் ஆபிரிக்கா என அழைக்கப்படுகிறது. இது பிரிட்டிஷ் முடியாட்சியின் அடையாளங்களில் ஒன்றான செங்கோலின் முடிவில் இணைக்கப்பட்டுள்ளது. பின்னர் இது இம்பீரியல் ஸ்டேட் கிரீடம் என்று அழைக்கப்படும் கிரீடத்திற்கு பயன்படுத்தப்பட்டது.

எக்செல்சியர் டயமண்ட்

கலினன் வைரத்தைக் கண்டுபிடிக்கும் வரை எக்செல்சியர் வைரமானது உலகின் மிகப் பெரிய வைரம் என்ற பெருமையைப் பெற்றது. இது தென்னாப்பிரிக்காவிள் கண்டெடுக்கப்பட்டது. வைரம் பின்னர் ஆம்ஸ்டர்டாமிற்கு கொண்டு செல்லப்பட்டது, அங்கு அது சிறிய வைரங்களாக வெட்டப்பட்டது. சில நகை நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த வைரத்தை துண்டுகளாக வெட்டுவது வைரங்களின் வரலாற்றில் மிகவும் துரதிர்ஷ்டவசமான அத்தியாயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பங்குகள் உலகெங்கிலும் உள்ள வாங்குபவர்களால் வாங்கப்பட்டன, தற்போது அவை யாருடையது என்பது குறித்து திட்டவட்டமான ஒப்பந்தம் இல்லை.

ஆர்லோவ் டயமண்ட்

பேரரசர் கேதரின் தி கிரேட் ஒஃப் ரஷ்யாவின் செங்கோலுடன் இணைக்கப்பட்ட இந்த வைரம் இப்போது கிரெம்ளின் டயமண்ட் டிரஸ்டின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் இந்தியாவில் தி கிரேட் மொகுல் டயமண்ட் என்றும் அழைக்கப்பட்டது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் வைரத்தைச் சுற்றியுள்ள மற்றொரு புராணத்தின் படி, கர்நாடகப் போரில் பங்கேற்ற பிரெஞ்சு சிப்பாய் ஒருவர் இந்துவாக மாறுவேடமிட்டு கோயிலில் வழிபடப்பட்ட ஒரு சிலையின் கண்ணிலிருந்து இந்த வைரத்தைத் திருடியதாகவும் கூறப்படுகிறது. இது விற்கப்பட்ட பிறகு, அது பேரரசி கேத்தரினுக்கு சொத்தாக மாறியது.

ஐடலின் கண் வைரம் (Idol’s Eye Diamond)

இந்த சூப்பரான வைரத்தை சுற்றி பல்வேறு புராணக்கதைகள் உள்ளன. இந்து தெய்வமொன்றின் கண்ணாக ஆரம்ப காலத்தில் இருந்ததாக கூறப்படுகின்றது. பேரரசர் இரண்டாவது அப்துல் ஹமீத் ஒட்டோமான் அதை ஒரு நகையாக அணியத் தொடங்கியபோது ஐரோப்பாவுக்கு இந்த வைரத்தைப் பற்றி முதலில் தெரியவந்துள்ளது. இருப்பினும், அவர் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர், இந்த வைரத்திற்கு என்ன ஆனதென பலர் ஆராய்ச்சி செய்தனர். இறுதியாக இது நியூயோர்க் நகரில் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த வைரத்தை பிலிப்பைன்ஸின் சர்வாதிகாரி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் வாங்கியதாக சிலர் சந்தேகிக்கின்றனர்.

ரீஜண்ட் டயமண்ட்

இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரத்தை XV ஆம் லூயிஸ்ன் இளைய பருவ பாதுகாவலரான பிரான்ஸை ஆட்சி செய்த இரண்டாம் பிலிப், டியூக் ஒஃப் ஆர்லியன்ஸ் வாங்கினார். இது பின்னர் முறையே லூயிஸ் XV மற்றும் XVI இன் முடிசூட்டுக்கு பயன்படுத்தப்படும் கிரீடங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்பட்டது. ராணி மேரி அன்டோனெட் இந்த வைரத்தை தனது தலைக்கவசத்தில் அணிய முடிவு செய்தார். நெப்போலியன் போனபார்ட் இந்த வைரத்தை தனது வாளை அலங்கரிக்க பயன்படுத்தினார். மேலும் அவரது வீழ்ச்சிக்குப் பிறகு வந்த கிட்டத்தட்ட அனைத்து பிரெஞ்சு மன்னர்களும் தங்கள் கிரீடங்களை அலங்கரிக்க அதைப் பயன்படுத்தினர். இன்று இந்த வைரத்தை லூவ்ரே அரண்மனையில் காணலாம்.

ஹோப் டயமண்ட்

ஸ்மித்சோனியன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் இந்த வைரத்தை கட்டுப்படுத்துகின்றது. இது உலகின் மிகவும் பிரபலமான வைரங்களில் ஒன்றாகும். இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படும் இந்த வைரம், பிரெஞ்சு அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து, பிரெஞ்சு புரட்சிக்குப் பின்னர் பிரிட்டனுக்கும், இறுதியில் அமெரிக்காவிற்கும் உரிமையின் மாற்றத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்பட்ட ஒரு வைரமாக அறியப்படுகிறது. இது உரிமையாளர்களுக்கு துரதிஷ்டத்தைத் தருகிறது என்றும் இதன் விளைவாக ஸ்மித்சோனியன் நிறுவனத்திற்கு அதன் இறுதி அறங்காவலர்கள் நன்கொடை அளித்தனர்.

Check Also

103 வயதில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட முதியவர் : இன்னும் அதிக குழந்தைகள் பெற ஆசையாம்!!

ஈராக்கை சேர்ந்த 103 வயதான முதியவர் மேலும் அதிக குழந்தைகளை பெற்று கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாவது திருமணம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *