Latest News
Home / ஆலையடிவேம்பு / அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்திற்கு வெற்றி!

அமரர்.சறோஜா கணேசபிள்ளை 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டியின் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்திற்கு வெற்றி!

ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் நடாத்த்திய அமரர்.சறோஜா கணேசபிள்ளை அவர்களின் 30வது வருட ஞாபகார்த்த மாபெரும் மென்பந்து கிரிகட் சுற்றுப் போட்டி (29.04.2023) சனிக்கிழமை கோளாவில், தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்று வந்தநிலையில்.

குறித்த போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் (14/05/2023) மாலை 4.00 மணியளவில் கோளாவில் தியாயப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தை எதிர்த்து திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகம் விளையாடி இருந்த நிலையில்.

கோளாவில் காந்தி விளையாட்டு கழகம் துடுப்பெடுத்தாடி 08 ஓவர்களில் 88 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்கள் அதனை எதிர்த்து துடுப்பெடுத்தாடிய திருக்கோவில் குட்நிக் விளையாட்டு கழகம் 08 ஓவர்கள் நிறைவில் 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

அந்த வகையில் 32 அணிகள் பங்கு பற்றிய சுற்றுத்தொடரில் கோளாவில், காந்தி விளையாட்டு கழகம் வெற்றிவாகை சூடியது.

வெற்றி பெற்ற அணிக்கு 20,000/- ரூபா பணப்பரிசும் மற்றும் வெற்றிக்கிண்ணம் என்பன வழங்கப்பட்டதுடன் , இரண்டாம் இடத்தை பெற்ற அணிக்கு 15,000/- ரூபா பணப்பரிசும் வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

Check Also

‘குருபிரதிபா பிரபா’ விருது பெற்ற அதிபர் திரு.ஸ்ரீ. மணிவண்ணன்….

கல்வியமைச்சினால் நடத்தப்பட்ட சிறந்த சேவை செய்தமைக்கான அதிபர்களுக்கான தேர்வில் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட, ஆலையடிவேம்பு கல்வி கோட்ட, அளிக்கப்பை திகோ/புனித …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *