ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் இன்று (01) அக்கரைப்பற்று ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தினரால் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விளையாட்டு மைதானத்தில் அளவுக்கு அதிகமாக வளந்திருந்த புற்கள் ஜொலிபோய்ஸ் விளையாட்டுக்கழகத்தின் உறுப்பினர்கள் பங்குபற்றலுடன் இயந்திரம் கொண்டு மட்டத்திற்கு வெட்டி சீர் செய்யும் செயற்பாடு நேர்த்தியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பணி மைதானத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் நன்மை கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன், சமூகத்தினர் மத்தியில் முன்னுதாரண செயல்பாடாக குறித்த செயற்பாடு காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.